Translate

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

மிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட


அமுக்கரா செடி 



 கொழுஞ்சி செடி 


மிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட 

முன்பு காலங்களில் காடுகளிலும்,மலைகளிலும் சித்தர்கள், முனிவர்கள் எப்படி கொடிய மிருகங்களின் தொல்லைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றால் நமக்கு மிக வியப்பாக இருக்கும்.அவர்கள் தங்களின் தவ வலி மையால் கட்டுப் படுத்தி இருப்பார்களோ என எண்ணத்தோன்றும் .
ஆனால் மூலிகைகளின் மூலம் சுலபமாக கொடிய மிருகங்களைக் கட்டுப்   படுத்தியுள்ளார்கள்.என்பதை சித்தர்களின் பாடல்களில் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.           

ஆவானே யானை சிங்கம் கொடுவாய் புலி 
அத்தனையும் வாய்கட்ட மூலி கேளு 
போவானே அமுக்கரா வெண் கொழுஞ்சி 
பூரணச் சந்திர கிரண வேளை தன்னில்
எவானே காப்புமிட்டு அரிஓம்  என்று 
லட்ச முருவேற்றி வெள்ளி தாம்பிரத்தில்
மூவான குளிசமிட்டுக் கட்டிப் போனால் 
மிருகமெல்லாம் வணங்குமே உனக்குத்தானே


யானை ,சிங்கம்,புலி போன்ற கொடிய மிருகங்கள் நம்மைக் கண்டவுடன் அடங்கி அடிபணிந்து வணங்க அமுக்கரா ,வெண் கொழுஞ்சி இரண்டு மூலிகைகளையும் சந்திர கிரகண நாள் அன்று கிரகணம் பிடிக்கும் வேளையில் கன்னி நூல் காப்புக் கட்டி,சாப நிவர்த்தி செய்து "அரி ஓம்" என என மந்திரம் ஒரு லட்சம் செபித்து ஆணி வேர் அறாமல் பறித்து வந்து இரண்டையும் ஒன்று சேர்த்து பட்டு நூலில் சுற்றி வெள்ளி ,செம்பு சேர்த்து செய்த தாயத்தினுள் வைத்து மூடி வலது கை புஜத்தில் கட்டிக் கொண்டு செல்ல அனைத்து மிருகங்களும் வணங்கும் என்கிறார் மச்சமுனி நாயனார் .
   

நன்றி !
ரிசி...
<siddharkalanjiyam.blogspot.in>
சித்தர் களஞ்சியம் குழு - face book

1 கருத்து:

  1. நன்றி அய்யா ! எப்படி குதூகலத்துடன் இருக்க வசிய மை கெடுக்குமா ! அம்மா அப்பா ,!

    நன்றி

    பதிலளிநீக்கு